
கொக்குவில் மேற்கு வீதி காப்பற் வீதியாக தரமுயர்வு
அதனைத் தொடர்ந்து குறித்த வீதியின் புனரமைப்பு தொடர்பில் பல தடவைகள் தெரியப்படுத்தி வந்திருந்த நிலையில் தற்போது குறித்த வீதியை காப்பற் வீதியாக தரமுயர்த்தும் பணிகளை வீதி அபிவிருத்தித் திணைக்களம் முன்னெடுத்து வருகின்றது.
மழைக்காலங்களில் குறித்த வீதியின் நிலைமையை நன்கு அறிந்தவன் என்ற வகையிலும் அப்பகுதி மக்களின் வாழ்வியல் மேம்பாட்டை கருத்திற்கொண்டும் பிரதேச மக்களின் சார்பில் முன்வைக்கப்பட்ட இக்கோரிக்கைக்கு இணங்கி மழைக்காலம் ஆரம்பிக்கும் முன்னரே குறித்த வீதியை காப்பற் வீதியாக தரமுயர்த்தும் நடவடிக்கையை முன்னெடுத்தமைக்கு எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.
குறித்த பணியை முன்னெடுப்பதற்கு ஒத்துழைப்பு வழங்கிய வீதி அபிவிருத்தித் திணைக்களத்தின் வடமாகாணப் பணிப்பாளர் அவ ர்களுக்கும் வீதி அபிவிருத்தித் திணைக்களப் பணிப்பாளர் அவர்களுக்கும் பொறியியலாளர் திரு. ஜெரோசன் அவர்களுக்கும் வீதி அபிவிருத்தித் திணைக்களப் பொறியியலாளர் கடமையாற்றிய திரு.நிரோசன் அவர்களுக்கும் எனது சார்பிலும் கொக்குவில் மேற்கு பகுதி மக்களின் சார்பிலும் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன். மக்களின் நீண்டகால தேவையை கருத்திற்கொண்டு இப்பணியை விரைந்து முன்னெடுத்தமைக்கு மீண்டும் ஒருமுறை எனது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன். பத்மநாதன் மயூரன் தவிசாளர் நல்லூர் பிரதேச சபை
📷 புகைப்படங்கள்
6 படங்கள்




