கொக்குவில் யாழ்பாணத்தில் 4 கி. மீ (3 மைல்) தொலைவில் அமைந்துள்ள
கிராமம்.கொக்குவில்; என்ற சொல்லிற்கு இரு அர்தங்கள் உண்டு. கொக்கு என்றால்
கரும்பு. இதனால் கொக்குவில் கரும்பு வில் என்று பொருள் படும். இரண்டாம்
பொருள் வில் என்பது சங்க காலத்தில் குளம் என்று அர்தப்படும். கொக்குவில்
கொக்குகள் நிறைந்த குளம் உடைய ஊர் என்று பொருள் படும்.
யாழ்.காங்கேசன்துறை வீதியை விஸ்தரிக்கும் போது 27 இந்து ஆலயங்களும்,
பழம்பெரும் கலாசாரச் சின்னங்களும் அழிவடையும் நிலை ஏற்பட்டிருக்கிறது.
இந்த விடயம் குறித்து யாழ்ப்பாணத்தில் உள்ள நிபுணர்களுடன் ஆராய்ந்து
மாற்று ஏற்பாடு செய்யவேண்டும் என அகில இலங்கை இந்து மாமன்றம் வடமாகாண
ஆளுநரிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
ஏரம்பு சுப்பையா (இ. ஜனவரி 11 1976) இலங்கையின் புகழ்பெற்ற நடன ஆசிரியர்களில் ஒருவர். கொக்குவில் கலாபவனம் நாட்டியப் பள்ளியின் அதிபர்.யாழ்ப்பாணம் இணுவிலைச் சேர்ந்தவர் அண்ணாவியர் கதிர்காமர் ஏரம்பு. இவர் தனது பரம்பரையின் ஆரம்பத்தில் கலையிலிருந்த ஈடுபாடு காரணமாக கூத்து வடிவத்தில் காவடி, இசை நாடகம் போன்றவற்றை நடாத்தினார். அத்துடன் ஒப்பந்த அடிப்படையில் இந்தியக் கலைஞர்களை வரவழைத்து தாயகம் முழுவதும் கலை நிகழ்ச்சிகளை நடாத்தினார்.
HTML clipboard1865ம் ஆண்டு கே.கே.எஸ் வீதி, கொக்குவிலில் இலங்கை திருச்சபையால் தேவாலயம் ஒன்று
கட்டப்பட்டது. அக்காலப்பகுதியில் அவர்களாலேயே இந்தப் பாடசாலையும் கட்டப்பட்டதாக
அறியப்படுகிறது. அப்போது கொக்குவிலில் மூன்று இடங்களில் CCTM பாடசாலை தொடக்கப்பட்டது.
ஒரு பெரும் சோகத்தை தந்தது, 1995 இன் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடப்பெயர்வு. ஒக்ரோபர் 30, வலிகாமம் வலிகளை தாங்கிக் கொண்டு ஒரு இரவுக்குள் தென்மராட்சிக்குள் இடம்பெயர்ந்தது. வார்த்தைகள் கொண்டு இதனை வடித்துவிட முடியாது. அனுபவித்தவன் ஒவ்வொருவனும் ஒரு பெருமூச்சோடு அதனை நினைவு கூர்ந்து கொள்வான்.
கொக்குவில் கோவில் பூமி
நான் கொள்கைகள் வகுத்த பூமி.
கோடிகள் அள்ளி கொடுப்பினும்
கோடான கோடி தலங்கள் முடிப்பினும்
பிறர்
எட்டிடா நண்பர் பெற்று
நான் வாழ்ந்திட்ட வசந்த பூமி.